என்னடா இவன் திடீர்னு சமுதாயத்து மேல பழி போடுறானே அப்படி சமுதாயம் என்ன கெட்டுப் போச்சுனு நினைக்கறீங்களா? பொருங்க சொல்றேன்...
காதலிக்க வயசு வேணும், பதினெட்டு வயசுல காதல் வந்தா அது வயசு கோளாறுனு சொல்றீங்க. ஆனா அந்த வயசுல நம்ம நாட்டோட பிரதமர்ல இருந்து முதல்வர் வரைக்கும் தேர்ந்தெடுக்கர உரிமை இருக்கு. உங்க தலையெழுத்து, இந்த நாட்டோட தலையெழுத்த மாத்தப் போற ஓட்டு உரிமைய அரசாங்கம் அவனுக்கு கொடுத்து இருக்கு. ஒரு நாட்டோட தலையெழுத்த தீர்மானிக்கர ஒருத்தன் தன்னோட தலையெழுத்த சரியா தீர்மானிக்க மாட்டானா? அப்ப இது அரசாங்க தவறா இல்ல இந்த சமுதாயம் காதலை தடுக்கிறதா? சொல்லுங்க... பெருசுங்களா வயசு கோளாறுனா பல பொண்ணுங்க பின்னாடி சுத்தறதுதான், ஒரு பொண்ணு பின்னாடி சுத்தறது இல்ல, ஒரு பொண்ணு பின்னாடி சுத்தின அதுக்கு பேரு "காதல்".அதுக்கப்பறம் நல்ல சம்பளம் கிடைச்சு(20 ஆயிரம்னு வெச்சுக்குவோம்) சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம்தான் காதலிக்கனுமாமா!!!! யோவ்!!! அப்ப 2ஆயிரம் சம்பளம் வாங்கறவன் எல்லாம் எங்கையா போறது??? இது எல்லாம் உங்களுக்கு அடுக்குமா? இதுதான் சமுதாய ஏற்றதாழ்வா? ஒரு பிரிவினரை காதலிக்க அனுமதிப்பதும் மற்றவரை தடுப்பதும். என்ன கொடுமை சார் இது??? இத எல்லாம் பாக்கறப்ப என்னோட ரத்தம் கொதிக்கிறது. இப்படி ஒரு ஏற்றதாழ்வு உள்ள ஒரு சமுதாயத்தில் வாழ்வது நமக்கு அவமானம் அல்லவா அதனால் காதல தடுக்க்காதிங்க. காதல் அப்படிங்கறது மனசு சமந்தப்பட்ட ஒன்னு அத போய் வயசு அனுபவம்னு கொச்ச படுத்தாதிங்க. நம்ம முன்னோர்களே என்ன சொல்லி இருக்காங்க கொஞ்சம் யோசிங்க, மனசுக்கு தோற்றமும் இல்ல அழிவும் இல்லனு சொல்லி இருக்காங்க அப்படி பட்ட மனசுல வர்ர காதல நீஙக மறுக்கலாமா?
சரி பெரியவங்க சொல்றாங்களேனு ஒரு நல்ல நிலைக்கு வந்ததுக்கு அப்புறம் வீதிய பாத்தா ஒரு பொண்ணு கூட தனிய போக மாட்டிங்குது. எல்லாமே ஜோடி ஜோடியா போகுது. (ஒரு பொண்ணு பதினோறாவது பன்னன்டாவது வரக்கூடாதே அதுக்காகவே காத்துட்டு இருந்த மாதிரி ஓடி போய் பிக்கப் பண்ணிக்கறது. அப்புறம் எங்க போய் இருபத்தைந்து வயதுல பொண்ண தேடுறது. இந்த விசயத்துல ஆண் இனமே தனது இனத்துக்கு துரோகம் பண்றது தாங்கிக்க முடியல. ஒரே பொண்ணுக்கு நாலு பேரு ரூட்டு போடுறது, அடுத்தவன் காதலிக்கறானு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவளுக்கும் இன்னொருத்தன் ரூட்டு போடுறது ஆண்டவா கொஞ்சம் பொண்ணுங்கள அதிக உருவாக்குனு தான் வேண்டத்தோனுது.)இதுல எங்கபோய் நமக்கு பொண்ணு தேடுறதுனு மனசு நொந்துபோய் வர்றத கட்டிகிட்டு வாழ வழிய தேட வேண்டியதுதான். பாருங்க பெரியவங்க பேச்ச கேட்ட கிடைக்கற பொண்ணு கூட கிடைக்காம போயிடும்...
அடுத்தது என்னோடது தெய்வீகமான காதல்.. அதுல காமமே இல்ல... அப்படி இப்படினு பீலா விடுறவங்களே, உங்க காதலியோட மனசு மட்டும் தான் வேணுனா ஏயா அவ அடுத்தவன கல்யாணம் பண்ணினது நீங்க கோட்டர் அடிச்சுட்டு குப்புறகவுந்தறீங்க? உங்களுக்கு தான் மனசு மட்டும் இருந்த போதுமே, அதுக்கு மேல காதலி நல்லா மட்டும் இருந்த போதும், அவள நல்லா வெச்சுக்கதான் அவள நா காதலிக்கறனு சொல்றவங்க, அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணி நல்லா இருந்தாக்கூட அவ மோசமானவ, அவளோட நடத்தைய பத்தி ஏப்பா தப்பா பேசறிங்க. அப்ப நீங்க உடலையும் சேத்திதான காதலிக்கறீங்க. அப்பா மகராசனுகளா ஒத்துக்கறேன் காதல் உண்மைதானு ஆனா அதுல காமம் இல்லனு காமடி பண்ணக் கூடாது. காமம் மட்டும் இருந்த அதுக்கு பேர் காதல் இல்ல, காமம் இல்லாம போனாலும் அதுக்கு பேரு காதல் இல்ல, ஒரு பெண்ணுடைய எல்லாவிதமான சுகத்திலும், துக்கத்திலும் சரிசமமாக கலந்துக்கறதுதான் காதல். அது உள்ளத்தில் இருந்து உடல்வரை பொருந்தும்.
அடுத்தது தன்னோட காதல சொல்லி ஏத்துக்காத பொண்ணுங்கள பிரண்டு, தங்கச்சினு டீ.ஆர் கனக்கா சொல்லி கடலை போடுறீங்க. எப்படீங்க ஒரு பொண்ண மனைவியா கனவு கண்டுட்டு, அவ "முடியாது பேசினா தங்கச்சினு நினச்சுச்சு பேசு" சொன்ன உடனே, சரினு தலையாட்டிடுட்டு நல்ல கடலை போடுறீங்க. நல்லவேள இதுவரைக்கும் எந்த தங்கச்சிக்கும் சீதனம் கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்காம இருக்கறீங்களே அதுவரைக்கு சந்தோசம். கொஞ்சம் யோசிங்க மனைவியா கனவு கண்ட ஒருத்திய தங்கச்சினு சொன்ன காமடியா இருக்காதா? அதுவரைக்கும் உங்க கனவுல ரெண்டு பேரும் ஒன்னா டூயட்டு பாடி இருப்பீங்க, முடியல...இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.
அடுத்தது காதல்ல தோல்வி அடஞ்சா என்னமோ வாழ்க்கையே போன மாதிரி... யோவ் அவளே உங்கள பத்தி கண்டுக்காத போது நீங்க ஏயா அவள நெனச்சுட்டு இருக்கீங்க? அட அவ நல்ல பொண்ணுத இல்லனு சொல்லுல, அவ முடியாதுனு சொன்னதுக்கு அப்புறம் எந்த ஆணிய நீங்க புடுங்க போறீங்க? உங்க நலன நினைக்கற நண்பர்கள், பெற்றோர்கள் இருக்கறப்ப உங்கள மதிக்காத ஒரு நல்ல பொண்ணுக்காக சும்மா வெட்டியா இருந்து என்னத்த சாதிக்கப் போறிங்க? போங்கையா போய் பொழைக்கற வழியா தேடுங்க. இந்த உலகத்துல எத்தனையோ நல்ல பொண்ணுங்க இருக்காங்க சாமிகளா, ஒரு சூப்பர் பொண்ணா பாத்து கல்யாணம் கட்டிகிட்டு ஒண்ணே ஒன்ன பெத்துகிட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் சந்தோசத்த தருவீங்களா? அத விட்டுட்டு...
அட வீரன்னு இருந்த போர்களத்துல சில தழும்புகள் ஏற்ப்படத்தான் செய்யும், அதுக்காக அடுத்த போர்களத்துக்கு போகாம இருக்கமுடியுமா? வீரனாக வாழகத்துகங்க எனிளம் சிங்ககங்களே..!
வாழ்க காதல்...
வளர்க காதல்...
சீரழிந்து போனதடா சமுதாயம்..!
Labels:
நக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
2 விமர்சனங்கள்:
gopal, nice post, :) nan edhume kalaaikla baya padatha :D , so thalaiva neeyum kaadhalika arambichutiaya
சரியான புலம்பல் ... இந்த சமுதாயம் வெட்டி சமுதாயம்...
Post a Comment