அகமகிழ்ந்து என்னை
நீ அணைத்து
முத்தமிடும் நேரம்
நெடுவானத்தையும்
நீண்டு செல்கிறது
நம் காதல்
நீ இட்ட முத்தத்தின் மீது
வழிந்தோடும் கண்ணீரும் தேனீராகிறது
உன் முத்தத்தின் ஈரத்தை
பூ சிந்தும் தேனென நினைத்து
மொய்க்க ஆரம்பித்து விடுகிறது
வண்ணத்துப் பூச்சிகள்
முத்தத்தின் சத்தம்
வெளியே கேட்டுவிடப் போகிறது
விலக்கிவிடாதே உதடுகளை
நான்கு உதடுகள்
இணைந்து நடத்தும்
காதல் திருவிழா
விழிகளில் பேசியது போதும்
கொஞ்சம் மொழிகளிலும் பேசேன் என்கிறேன்
இறுக்கி அணைத்து முத்தமிட்டு சொல்கிறாய்
காதலின் இனிமையான மொழி மௌனமென்று
கையோடு ஒட்டிக் கொள்ளும்
பட்டாம்பூச்சியின் வண்ணத்தைப் போல
என் கன்னமும் உன் முத்தமும்
நாம் அயர்ந்த வேளையில்
என் கன்னத்தை
கொத்திச் செல்லும்
உன் உதடுகள்
வண்டினை கொள்ளை
கொள்ளும் பூவாசம்
உலகிலேயே மிக
அழகான ஓவியம்
நீ முத்தமிட்டபின்
என் கன்னங்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
உன் உதட்டுச்சாயம்
நித்தம் ஒரு முத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
4 விமர்சனங்கள்:
நீ இட்ட முத்தத்தின் மீது
வழிந்தோடும் கண்ணீரும் தேனீராகிறது"
அழகு. இது தோணாமல் போச்சே :). சூப்பர்.
என்னங்க ஸ்ரீ உங்க முத்ததின் போது இது தோணலையா??
அட நீங்க வேற கோபால். போன வாரம் நான் முத்தக்கவிதைகள் எழுதும் போது இது தோணலைன்னு சொன்னேன் :)
@ ஸ்ரீ
அட அதத்தான் நானும் சொன்னேன் ;)
Post a Comment