செல்லும் போதெல்லாம்
தனிமையில் தவிக்கும்
அனாதை என் மனம்
நீ இருந்தபோதிலும்
சிறுகுவளைத் தண்ணீரில்
பிடித்து விட்டதாய்
கூத்தாடுகிறதென் மனம்
விதையாக காதலை விதைத்து
காத்திருக்கிறது என் மனம்
வான் மழையாய் நீ வாராயோ
என் மனதில்
நீ குடியேறியதும்
இன்று கோவிலானது
வானில் பறக்கும் விமானத்தை
பார்த்த குதூகலத்தில் குதிக்கும்
சிறுவனாய் என் மனம்
2 விமர்சனங்கள்:
"தொலைதூர நிலவாய்
நீ இருந்தபோதிலும்
சிறுகுவளைத் தண்ணீரில்
பிடித்து விட்டதாய்
கூத்தாடுகிறதென் மனம்"
இந்த வரிகள் கொள்ளை அழ்கு :)
தமிழும், காதலும் எப்போதுமே கொள்ளை அழகுங்க ஸ்ரீ,
கருத்துக்கு நன்றிங்க
Post a Comment