தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் - 1
தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் - 2
தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் - 3
தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் - 4
கதவு அவர்கள் தட்டியதும் தானாக திறந்தது. உள்ளே அவள் இல்லை. எல்லா இடங்களிலும் தேடியும் அவள் இல்லாததால் கவலையில் ஆழ்ந்தனர். திடீர்ரென வெளிகதவு திறக்கும் சத்தம் கேட்க, கையில் விபூதியுடன் திவ்யா நின்று கொண்டிருந்தாள்.காலை நேரமே எழுந்து கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு வந்துஇருந்தாள்.
"என்னமா, பொண்ண காணம்னு பயந்துட்டிய... அப்படி எல்லாம் நா உங்கிட்ட சொல்லிக்காம எதுவும் பண்ணிட மாட்டேமா"
வாரி அணைத்துக் கொண்டாள் அவளது தாய்.
"சரிமா, நான் இன்னைக்கு ஆஸ்பத்திரி போயிட்டு ஆப்ரேசன் முடிஞ்சதும் வந்துடறேன். எப்படி இருந்தாலும் இன்னைக்கு நடக்கற ஆப்ரேசன்ல சக்தி நல்லா ஆயிடுவான். அதுகப்புறமாவது என்னோட காதல சேத்துவைங்கபப்பா" என புன்னகை சிந்தியவாறு சொல்லிச் சென்றாள்.
மருத்துவமனையில் சக்தியின் பொற்றோர் மற்றும் சில நண்பர்களும் கூடவே திவ்யாவும் இருந்தனர். அனைவரது முகத்திலும் இன்று நடைபொறும் ஆப்ரேசன் நிச்சயம் வெற்றி பெறும், சக்தி மீண்டும் அவர்களுக்கு கிடைக்கப் போகிறான் என்ற ரேகைகள் படர்ந்திருந்தது. அவர்களுது எண்ணம் போலவே நடந்தேறியது. ஆப்ரேசன் வெற்றிகரமாக நடந்தது. இரண்டு மணி நேரத்திற்க்கு பின்னர் முடிவு தெரியப்படுத்தப்படும் என டாக்டர்கள் கூறினர்.
இரண்டு மணி நேரம் கழித்து...
சக்கர நாற்க்காலியில் சக்தியை டாக்டர்கள் அழைத்து வந்தனர். அனைவரது முகத்திலும் ஆனந்தம், டாக்டரின் முகத்தை தவிற... எப்போதும் போல் தான் இப்போதும் சுயநினைவில்லாமல் இருந்தான் சக்தி.வற்றிபோன கண்ணீர் வரண்ட துளியாக வெளிவரத்துடித்தது அனைவருக்கும்.
டாக்டரிடம் இருந்து சக்தியை பொற்றுக் கொண்டாள் திவ்யா.
" இனிமே சக்திய நா பாத்துக்கறேன், நீங்க யாரும் சக்திய பத்தி கவலைப்பட வேண்டாம். கண்டீப்பா என்னோட சக்தி எனக்கு கிடைப்பான். நா பத்துகிட்டா கண்டீப்பா அவன் குணமடைஞ்சுடுவான்" என யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவனை சக்கர நாற்க்காலியில் வைத்து அழைத்துச் சென்றாள். மனதில் தனது பொற்றோரிடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, எதிரே இருந்த வழிப்பிள்ளையார் கோவிலில் இருந்த ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டாள்.காதல் என்றுமே தோற்றதில்லை, மீண்டும் அவன் அவளுக்கு நிச்சயம் கிடைப்பான்.
" நீ போகும் பாதை எதுவென்று சொல்லு, நானும் அங்கே வர..."
முற்றும்.
தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் - 5
Subscribe to:
Post Comments (Atom)
3 விமர்சனங்கள்:
தலைப்புக்கு ஏற்ற கதை. நல்லா இருந்தது ஆனா குட்டிக்கதையா போச்சே!!
இதுவே மிக நீளமான கதை போல இருந்துச்சு தல, அதனால தான் வசனத்த எல்லாம் கொறச்சு 5 பாகத்து முடிக்கற மாதிரி கொண்டு வந்தேன். இத முழுசா எழுதி இருந்தா ஒரு மெகா சீரியல் போல இருந்திருக்கும் :)
:)))))
Nalla Nadai... kadaisila konjam kan kalanga vatchitteenga... :(((
Post a Comment